Homeசெய்திகள்சினிமாஎங்க அண்ணன் ஷூட்டிங்கில் இதை தான் பண்ணிட்டு இருக்காரு.... 'சூர்யா 45' குறித்து கார்த்தி!

எங்க அண்ணன் ஷூட்டிங்கில் இதை தான் பண்ணிட்டு இருக்காரு…. ‘சூர்யா 45’ குறித்து கார்த்தி!

-

- Advertisement -

சூர்யா 45 படம் குறித்து கார்த்தி அப்டேட் கொடுத்துள்ளார்.எங்க அண்ணன் ஷூட்டிங்கில் இதை தான் பண்ணிட்டு இருக்காரு.... 'சூர்யா 45' குறித்து கார்த்தி!

நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரை முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். எங்க அண்ணன் ஷூட்டிங்கில் இதை தான் பண்ணிட்டு இருக்காரு.... 'சூர்யா 45' குறித்து கார்த்தி!மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் எனவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே பொள்ளாச்சி பகுதியில் தொடங்கி சென்னை போன்ற பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தை 2025 செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பேசிய கார்த்தி, சூர்யா 45 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “அண்ணா இப்போ ஷூட்டிங்கில் இருக்கிறார். பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ஃபுல் ஃபார்மில் இறங்கி ஆடிக்கொண்டிருக்கிறார். ரெட்ரோ வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ