Homeசெய்திகள்சினிமாஇந்த கதை தான் என்னுடைய பலம்.... 'இரும்புக் கை மாயாவி' குறித்து லோகேஷ் கனகராஜ்!

இந்த கதை தான் என்னுடைய பலம்…. ‘இரும்புக் கை மாயாவி’ குறித்து லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருபவர். அதாவது இவர் தமிழ் சினிமாவில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை உருவாக்கி அதன் கீழ் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல படங்களை இயக்கி வருகிறார். இந்த கதை தான் என்னுடைய பலம்.... 'இரும்புக் கை மாயாவி' குறித்து லோகேஷ் கனகராஜ்!அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ போன்ற படங்கள் எல்சியு -வின் கீழ் அடங்கும். மேலும் கைதி 2, விக்ரம் 2, லியோ 2 போன்ற படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளார் லோகேஷ். அதேசமயம் இறுதியில் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் என்ற படத்தையும் இயக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இவர் சூர்யா நடிப்பில் இரும்புக் கை மாயாவி என்ற திரைப்படத்தை இயக்கத்திட்டமிட்டிருந்தார். அதன்படி அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஃபேண்டஸி கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார் லோகேஷ். இந்த கதை தான் என்னுடைய பலம்.... 'இரும்புக் கை மாயாவி' குறித்து லோகேஷ் கனகராஜ்!இரும்புக் கை மாயாவி திரைப்படம் நான் வித்தியாசமான ஸ்டைலில் படங்கள் பண்ணுவதை பற்றிய அனைத்து கேள்விகளையும் உடைத்து விடும். இந்த கதை தான் என்னுடைய பலம். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பே நான் எழுதினேன். நேரம் கிடைக்கும் சமயத்தில் அந்தக் கதையில் சில மேம்பாடுகளை செய்து வருகிறேன். இந்த படத்தில் துப்பாக்கிகள் இருக்காது. காதல் மற்றும் பேன்சி தான் இந்த படத்தில் வலுவாக இருக்கும். இது ஒரு காமிக் புத்தகம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ