நடிகர் சூர்யா நடிப்பின் நாயகன் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகர் சூர்யா, வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. இருப்பினும் நீண்ட நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் தான் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படமானது 2025 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆனால் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல் என்னவென்றால், வாடிவாசல் படத்திற்கு முன்னர் நடிகர் சூர்யா தனது 45வது திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இதனை ஆர்.ஜே பாலாஜி இயக்கப் போவதாகவும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
அடுத்தது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் கமிட்டாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சூர்யா 45 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் சூர்யா 45 திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஆகையினால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்குமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- Advertisement -