Homeசெய்திகள்சினிமாகாலம் போல் கடந்து செல்வேன்..... கவிஞர் வைரமுத்துவின் இன்ஸ்டா பதிவு!

காலம் போல் கடந்து செல்வேன்….. கவிஞர் வைரமுத்துவின் இன்ஸ்டா பதிவு!

-

கடந்த 1980ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் திரைத்துறையில் நுழைந்தவர் கவிஞர் வைரமுத்து. கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையில் பொள்ளாச்சி செய்து வரும் வைரமுத்து சுமார் 7 முறை தேசிய விருதுகளை அள்ளி இருக்கிறார். காலம் போல் கடந்து செல்வேன்..... கவிஞர் வைரமுத்துவின் இன்ஸ்டா பதிவு!இவர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 450 முதல் 600 பாடல்கள் வரை இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இருவரும் இணைந்து பணியாற்றிய 6 ஆண்டுகளை பொற்காலம் என்றே சொல்லலாம். ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. அப்படி பங்கேற்றால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. சமீப காலமாக இருவரை பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி வந்தன.காலம் போல் கடந்து செல்வேன்..... கவிஞர் வைரமுத்துவின் இன்ஸ்டா பதிவு!இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பழித்தாரும் வாழ்க, என்னை பகைத்தரும் வாழ்க. மன்றில் இழித்தாலும் வாழ்க. வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டி சுழித்தாரும் வாழ்க. என்னைச் சுற்றி வெற்றி வாய்ப்பை கழித்தாரும் வாழ்க. நானோ காலம் போல் கடந்து செல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ