- Advertisement -
புதிதாக திருமணம் செய்துகொண்ட ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரணையும், அவரது மனைவியையும் நடிகர் விஜய் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். சென்னை நகரில் பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இருந்தாலும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ஒன்றாக சேர்ந்து படத்தை கொண்டாடிப் பார்க்கும் திரையரங்கம் என்றால் அது ரோகிணி திரையரங்கம் தான். பெரும் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது, ரசிகர்களுக்கெனவே சிறப்பு காட்சிகளை திரையிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திரையரங்கம் ரோகிணி. விஜய் மற்றும் அஜித்தின் பல ஹிட் திரைப்படங்கள் இந்த திரையரங்கில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி இரு்ககின்றன. அண்மை காலமாக ஸ்டார் படங்களின் முன்னோட்டமும் திரையிடப்படுகின்றன.
