நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே 10ஆம் தேதி ஐதராபாத் பகுதியில் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 7ம் தேதி வரை முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இருப்பினும் படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு வில்லன் கதாபாத்திரம் இருக்கிறதாம்.
அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்றொரு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். இது சம்பந்தமான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே விஜய் சேதுபதி பல படங்களில் வில்லனாக நடித்திருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தான் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். ஆகையால் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.