நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு சென்னை, ரஷ்யா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளாவிற்கு வரும் செய்தியை அறிந்த கேரள ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் நடிகர் விஜய் வரவேற்றனர். நாளுக்கு நாள் விஜயை காண வரும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்ல நடிகர் விஜய்யின் ரசிகர்களை சந்தித்து பேசி தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ரசிகர்களிடம் மலையாளத்தில் உரையாடினார். பின்னர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து பேசிய விஜய், “தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் மாதிரி. நீங்கள் எல்லோரும் இந்த 32 ஆண்டுகளில் என்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்ப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஜென்மம் இல்லை இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் என்றும் உங்களுடைய விஜய் தான்” என்று எமோஷனலாக பேசியதோடு அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
- Advertisement -