Homeசெய்திகள்சினிமாசிம்பு, பிரபாஸ் திருமணத்திற்கு பின் தான் எனக்கு.... நடிகர் விஷால் நகைச்சுவை பதில்...

சிம்பு, பிரபாஸ் திருமணத்திற்கு பின் தான் எனக்கு…. நடிகர் விஷால் நகைச்சுவை பதில்…

-

தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அவர் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகா கோலிருட் திரையுலகில் முன்னிறுத்தியது. இத்திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இறுதியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரத்னம். ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இவர்களின் கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல, ரத்னம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஷால், தனது திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது அவர், தான் தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்தபிறகு திருமணம் குறித்து யோசிப்பதாகவும் ஆனால், சல்மான்கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகியோரின் திருமணத்திற்கு பிறகு தான் எனக்கும் திருமணம் நடைபெறும் என்றும் கூறி இருக்கிறார்.

MUST READ