- Advertisement -
சென்னை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டை வெள்ளநீர் சூழந்தது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2015-ம் ஆண்டை காட்டிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ., பூந்தமல்லியில் 34 செ.மீ., ஆவடியில் 28 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ., தாம்பரம் 24 செ.மீ., மகாபலிபுரம், ஐஸ் ஹவுஸில் 22 செ.மீ. மழையும் பதிவானது.
