கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து கார்த்தி, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வா வாத்தியார் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கார்த்தி, மாரி செல்வராஜ், சுந்தர். சி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். கைதி 2 திரைப்படமும் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கார்த்தி 29 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் தமிழ் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் வடிவேலு, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க போவதாகவும், இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.