spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!

-

- Advertisement -

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி 3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில், தனக்கு அறிமுகமான சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் சீன நாட்டிலிருந்து 100 கோடி ரூபாய் நிலக்கரி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி ரூ.3 கோடி கொடுத்தால், அசலுடன் வரும் லாபத்தில் இரண்டு மடங்காக ரூ.6 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். அதற்கு கொலட்ரல் செக்யூரிட்டியாக சுரேஷ் பெயரில் உள்ள ஆவணங்களையும் அவரது மனைவி ஈஸ்வரி பெயரிலுள்ள அசல் ஆவணங்களையும் தருவதாக கூறியதை நம்பி ரூ.2,97,00,000/- பணத்தை அனுப்பி வைத்தாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சீன நாட்டிலிருந்து 100 கோடி நிலக்கரி ஆர்டர் மோசடி – ஒருவர் கைது!

சென்னை மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை மோசடி ஆவண குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சுரேஷ் என்பவரை கைது செய்ய உதவி ஆணையாளர்  ஜான்விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் அருகே மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுரேஷை கைது செய்து எழும்பூர்  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோல் வெளிநாடுகளில் கம்பெனி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என பொய்யாண வாக்குறிதிகள் கொடுத்து பல மோசடி குற்றங்கள் நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், இதுபோன்ற மோசடி கும்பல் வலையில் சிக்கி ஏமாற்றம் அடைய வேண்டாம் என காவல்துறை சார்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ