Homeசெய்திகள்க்ரைம்வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்

-

- Advertisement -

கடன் கொடுத்தவரை மிரட்டி பணம் பறிக்க துணை நடிகர்களை வைத்து  போலீசார் போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற சலூன் கடை உரிமையாளர் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார்.வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் பாக்யாநகர், இரண்டாவது லைனில், சலூன் கடை நடத்தி வருபவர் ஷியாம் குமார்.  இவர் ஆறு மாதங்களுக்கு முன் ஓங்கோலை சேர்ந்த ஒருவரிடம் தனது தேவைக்காக ரூபாய்.10 லட்சம் கடன் வாங்கினார். பல மாதங்களாகியும் கடனை திரும்ப தராததால், கடன் கொடுத்தவர் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்தார்.  இதனால் கடன் கொடுத்தவரிடம் இருந்தே  பணத்தை பறிக்க திட்டமிட்டார் ஷியாம் குமார்.

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்

இதற்காக  தனக்குப் தெரிந்த  ஐதராபாத்தில் ஃபேஷன் டிசைனிங் மற்றும் துணை நடிகையாக இருக்கும் விஜயலட்சுமியைத் தொடர்பு கொண்டு ஒருவரை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் எனக்கூறி தனக்கு உதவி செய்தால் பணம் தருவதாக கூறினார்.  இதனையடுத்து விஜயலட்சுமி துணை நடிகர்களான ஐதாராபாத்தை சேர்ந்த பிரகாசம், சந்தாபுரம் ஸ்ரீசைலம், டோர்னாலா,  ஸ்ரீசைலத்தில், ஐதராபாத் கிருஷ்ணாநகரில் படப்பிடிப்புக்கு வாடகைக்கு துணிகளை சப்ளை செய்பவர்களிடம் இருந்து நான்கு ஜோடி போலீஸ் சீருடைகள் பெற்று இம்மாதம் 29ம் தேதி காலை ஓங்கோலில் உள்ள ஷியாம் குமாரின் கடைக்கு அனுப்பினார்.

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க குறுக்கு வழி….. உஷாரான தொழிலதிபர்

அவர்கள்  திட்டத்தின்படி அன்று மாலை 4.30 மணிக்கு கடன் கொடுத்த தொழிலதிபரை  தனது அறைக்கு வந்தால் பணம் தருவதாக  ஷியாம்குமார் கூறினார். இதனால் கடன் கொடுத்த தொழிலதிபரும்  ஷியாம்குனார் சொன்ன அறைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே விஜயவாடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்தார். அப்போது இவர்கள் போட்ட இத்திட்டத்தின்படி, போலீஸ் சீருடையில் திடிரென அங்கு வந்த 4 பேர்  அங்கிருந்த  பெண்ணைத் தாக்கி பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக  வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டினர்.  அதில் எஸ்.ஐ. சீருடையில் இருந்த ஒருவர் பாதிக்கப்பட்டவரின் மோதிரத்தை பறித்து அவரது ஆடைகளை கழற்றி போட்டோ ,வீடியோ எடுத்தார்.

ரூ 1.50 கோடி  கொடுக்காவிட்டால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையெல்லாம் மிரட்டி பணம் பறிப்பதற்காக ஷியாம் குமார் செய்திருப்பதை உணர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலதிபர் பணம் தருவதாகவும் அதற்கான ஏற்பாடு செய்வதாக கூறி அங்கிருந்து  உடனடியாக ஓங்கோல் தாலுகா போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம்குமார், நிம்மலா விஜயலட்சுமி, சந்தாபுரம் ஸ்ரீசைலம், சுரேஷ், ஆம்பர்பேட்டை ஸ்ரீலட்சுமி, கொக்கிரபட்டி துர்காபிரசாத், தொர்னாலா வினோத்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  ராஜு, ஸ்ரீசைலம் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களையும் விரைவில் கைது செய்வோம் என  பிரகாசம் மாவட்ட எஸ்.பி  ஏ.ஆர்.தாமோதர்  தெரிவித்தார்.

அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத சரித்திர பதிவேடு குற்றவாளி – நடைபயிற்சி செய்த பெண்ணுக்கு சில்மிசம்!

 

MUST READ