Homeசெய்திகள்க்ரைம்ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!

ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!

-

- Advertisement -

அண்ணா நகர் :குடிபோதையில் மளிகை கடை உரிமையாளர் மூக்கு உடைப்பு ஆட்டோ மீது விழுந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் இயக்குநர் கவுதமனின் மகன் உள்பட இருவர் கைது காவல் நிலைய ஜாமினிலேயே விடுவிப்பு

ஆட்டோ மீது விழுந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்…இயகுனரின் மகன் கைது!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் சண்முகம் 35. மளிகைக்கடை உரிமையாளர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னை அண்ணா நகரில் உள்ள உணவகத்துக்கு தனது குடும்பத்தினருடன் தனது சொந்த(0wn board) ஆட்டோவில் வந்துள்ளாா். சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் ஆட்டோவில் புறப்பட தயாராயாகியுள்ளாா். அப்போது இரு இளைஞர்கள் காரை நிறுத்திவிட்டு தள்ளாடியபடி நடந்து வந்து சண்முகத்தின் ஆட்டோ மீது சாய்ந்துள்ளனர். இதை சண்முகம் கண்டித்துள்ளாா். ஆத்திரமடைந்த இரு இளைஞர்களும் சண்முகத்தை நைய புடைத்துள்ளனர்.

இதில் சண்முகத்துக்கு மூக்கு மற்றும் வாயில் ரத்தக்காயம் ஏற்பட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளாா். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் சினிமா மற்றும் சின்னத்திரை இயக்குநர் கௌதமனின் மகன் தமிழழகன்(24) மற்றும் அமைந்தகரையை சேர்ந்த அவரது நண்பர் சரத் (வயது 26 )என்பது தெரியவந்துள்ளது. பிறகு இருவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே போலீசார் விடுவித்துள்ளனர்.

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

MUST READ