Homeசெய்திகள்க்ரைம்மனைவி டார்ச்சரால் வீடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை: சிக்கிய கொடூர குடும்பம்

மனைவி டார்ச்சரால் வீடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை: சிக்கிய கொடூர குடும்பம்

-

- Advertisement -

நாட்டையே பரபரப்பாக்கிய அதுல் சுபாஷ் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு போலீசார் குருகிராமில் அதுலின் மனைவி நிகிதா சிங்கானியாவை கைது செய்தனர்.

பெங்​களூருவை சேர்ந்த தனியார் நிறு​வனத்​தில் மேலா​ளராக பணியாற்றிய அதுல் சுபாஷ் (34) கடந்த 16-ம் தேதி தற்கொலை செய்​து​கொண்​டார். அவர் இறப்​ப​தற்கு முன்பு, 24 பக்கங்​களில் தற்கொலைக்கான காரணத்தை விவரிக்​கும் கடித​மும், 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவை​யும் வெளி​யிட்​டார்.

அதில் தன் மனைவி நிகிதா சிங்​காரி​யா​வுடனான விவாகரத்து வழக்​கில் ஜீவனாம்​சமாக ரூ.3.3 கோடி கேட்டு துன்​புறுத்​தி​யது, தன் 3 வயது மகனை காண்​பிக்​காமல் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.40 ஆயிரம் கோரியது, பொய் வழக்​குகளை தொடுத்து தொல்லை கொடுத்​தது, வழக்கை தீர்க்க நீதிபதி ரீட்டா கவுசிக் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டது ஆகிய​வற்றை குறிப்​பிட்​டுள்​ளார். இந்நிலை​யில் மறைந்த அதுல் சுபாஷின் சகோதரர் விகாஷ், நிகிதா சிங்​காரியா, அவரது தாய், சகோதரர் ஆகியோ​ருக்கு எதிராக புகார் அளித்​தார். இதையடுத்து மாரத்​தஹள்ளி போலீ​ஸார் நிகிதா சிங்​காரியா, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோ​ர் 3 நாட்​களுக்​குள் விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகு​மாறு நோட்​டீஸ் அனுப்​பி​னர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் மூவரையும் அழைத்து செல்ல பெங்களூரு போலீசார் தயாராகி வருகின்றனர். முன்னதாக, சிங்கானியா மற்றும் அவரது மாமியார் உள்ளிட்டோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

MUST READ