spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் - அலேக்காக தூக்கிய போலீசார்

ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் – அலேக்காக தூக்கிய போலீசார்

-

- Advertisement -

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் ரூ. 25 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வாங்கிய சார் பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென்று சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களின் நிலங்கள் இங்கு பத்திர பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

we-r-hiring

ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் இங்கு சார் பதிவாளர்களாக சாந்தி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், பத்திர பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் பெறப்படுவதாகவும், அலுவலகத்தில் புரோக்கர் நடமாட்டம் உள்ளதாகவும் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது.

இதனையடுத்து தகவலின் அடிப்படையில் நேற்று  மாலை 6  மணியளவில் ஏடிஎஸ்பி திவ்யா உத்திரவின் பேரில் ஆய்வாளர் எழிலரசி தலைமையில் ஆறுக்கும் மேற்பட்ட போலீசார் சார் பதிவாளர் அதிரடியாக நுழைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர் சாந்தியிடம் விசாரணை நடந்தப்பட்டது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு லஞ்ச பணம் எங்கேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டது. மேலும், அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சார் பதிவாளர் சாந்திக்கு சொந்தமான காரிலும் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் லஞ்சம் பெற்றதற்கான சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை ஆய்விற்கு உட்படுத்தினர். நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி இன்று பிற்பகல் வரை சோதனை நீடித்தது

சோதனையில் அலுவலகத்தினுள் ரொக்கமாக பணம் ஏதும் சிக்காத நிலையில் லஞ்ச பணம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் சார் பதிவாளர் சாந்தி மற்றும் இவரது உறவினர்களுக்கு ஜி.பே மற்றும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து சார்பதிவாளர் சாந்தி மற்றும் லஞ்ச பணம் பெற உதவிய அலுவலக ஊழியர் பிரவீன் குமார், சார்பதிவாளரின் கார் ஓட்டுநர் ராஜா  ஆகியோரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இடைத்தரகர் நவீன்குமார் என்பவரை தேடி வருகின்றனர். மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ