spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்செல்போன் மோகம்: பொறியியல் கல்லூரி மாணவன் பலி!

செல்போன் மோகம்: பொறியியல் கல்லூரி மாணவன் பலி!

-

- Advertisement -

சென்னையில் தனக்கு தானே சோடியம் நைட்ரேட் ஊசி போட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

செல்போன் மோகம்: பொறியியல் கல்லூரி மாணவன் பலி!

we-r-hiring

சென்னையில் தனக்கு தானே சோடியம் நைட்ரேட் ஊசி போட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். கொடுங்கையூர் மூலக்கடையை சேர்ந்தவர் பால் யூட்டி கிளாஸ் 20 வயதான இந்த இளைஞர் தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், கடந்த 2 வருடங்களாக செல்போனுக்கு அடிமையாகி தூக்கம் இல்லாமல் இருந்த வந்துள்ளதாக தொியவந்துள்ளது. இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அந்த மாணவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறாா்.

இந்நிலையில், வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தாா்கள். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மாணவர் உயிரிழந்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மாணவர் உயிரிழப்பு குறித்து கொடுக்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இவர் தனக்கு தானே சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை போட்டு கொண்டு, தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த மாணவன் எதற்காக சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை செலுத்தி கொண்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமித்ஷாவின் ஒரே டிமாண்ட் “இதுதான்”! பலிகடாவாகும் தலைவர் யார்? பகீர் தகவலை பகிர்ந்த எஸ்.பி. லட்சுமணன்!

MUST READ