Homeசெய்திகள்க்ரைம்ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது

-

- Advertisement -

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது

திருவள்ளூர் அருகே ஆள்மாறாட்ட கொலை வழக்கில்  தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான குதிரை சுரேஷை 10 மாதங்களுக்குப் பிறகு வேறொரு வழக்கில் சிறையில்  இருந்தவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பான  தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்  மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் ராபின்( 26). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  31ம் தேதி  இரவு நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளர்.

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது
திருவள்ளூர்

பின்  நண்பர் கமலுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது ராபினை பின் தொடர்ந்த 2 இருசக்கர  வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியது.அந்த வழக்கில் கொலையாளிகளை அவர்கள் தப்பிய இருசக்கர வாகன எண் வைத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற டியோ கார்த்திக் (23) மதுரை சரவணன் ( 26)  ராகுல் (26) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊத்துக்கோட்டை தனிப்படை போலீசார் மூவரையும் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவர் மீது பின்னர்  குண்டார் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் அவர்கள் ஊத்துக்கோட்டை போலீசார்  கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். அதில் ராகுல் என்பவர் மட்டும் அன்றைய தினம் ராபினை  வெட்டவில்லை என்றும் இரு சக்கர வாகனத்தில்  நான் தயாராக நின்று கொண்டிருந்தேன் எனவும் தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடியதால் அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து  செய்ததால் அந்த வழக்கில் இருந்து ராகுல் பிணையில் வெளியே வந்து விட்டார்.

அதில் அவனுடைய கூட்டாளிகளான டியோ கார்த்திக் மதுரை சரவணன் இருவரும் குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய புழல் சிறையில் தற்போது இருந்து வருகின்றனர். ராபின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சேதுபதியின் கூட்டாளியான செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கிற குதிரை சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில். கடந்த பத்து மாதங்களாக காஞ்சிபுரம் பள்ளிப்பட்டு, ஆந்திரா என வெவ்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து வந்துள்ளார்.

அவர்  தேடப்படும் போலீசாருக்கு 10 மாதங்களாக டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 16ஆம் தேதி சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியில் பிரபல ரவுடி தீனதயாளன் நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட குதிரை சுரேஷின் நண்பர்களை தீனதயாள் அடித்ததாக கூறப்படுகிறது.

அடி வாங்கிய நபர்கள் அது தொடர்பாக குதிரை சுரேஷிடம் தங்களை தீனதயாளன் அடித்து விட்டதாகவும் தொலைபேசியில் கூறியுள்ளனர். அப்போது குதிரை சுரேஷ் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துக்கொண்டு தீனதயாளின் குடியிருக்கும்  விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது ஏரிக்கரை அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தீன தயாளனை கண்ட குதிரை சுரேஷ் தான் தயாரித்து எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து அவர் மீது நோக்கி வீசியுள்ளார். அப்போது தீனதயாளன் அந்த நாட்டு வெடிகுண்டில் இருந்து தன் மீது படாமல் தப்பித்துள்ளார்.

தீனதயாள் அந்த கும்பல் இடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். அடுத்தடுத்து மூன்று நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அலறி அடித்து குடியிருப்பில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து குதிரை சுரேஷ் அவனது கூட்டாளிகள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.

விருகம்பாக்கம் போலீசார் விசாரணையில் சோட்டா விக்கியை அவரது பிறந்த நாள் விழாவில் தாக்கியதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக  தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாகவும், இந்நிலையில் சோட்ட விக்கியை தாக்கியதற்கு அவரது தம்பி அளித்த புகாரின்படி தீனதயாளன் 21, வளசரவாக்கம் சஞ்சய் 19,  சின்னத்தம்பி 21 ஆகிய மூவரை போலீசார் கைது செய்திருந்தனர்

மூன்று குற்றவாளிகள் கைது

அதேபோல் தீனதயாளனின் தாய் புகாரின்படி  நாட்டு வெடிகுண்டு வீச திட்டமிட்டு நெற்குன்றத்தைச் சேர்ந்த ‘மெர்சி’  என்ற விக்கி, 21 சோட்டா என்ற விக்கியை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்திருந்த முக்கிய குற்றவாளி குதிரை சுரேஷ் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

குதிரை சுரேஷ் வெளியே சென்று தங்குவதற்கும் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கும் கையில் பணம் இல்லாததால் ஒரு பக்கம் போலீஸ் தன்னை தேடுவதை அறிந்தும், மறுபக்கம் ஏற்கனவே 5 கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரி டீம் தன்னை தேடி வருவதை உணர்ந்த குதிரை சுரேஷ் சிறைக்கு சென்று விடுவதே பாதுகாப்பு என கருதி இந்த கடந்த  1 ந் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக சரணடைந்துள்ளார்.

சரணடைந்த குதிரை சுரேஷ் மீது விருகம்பாக்கம் போலீசார் குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 தேதி ஊத்துக்கோட்டையில் திருமண நிகழ்ச்சிகள் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராபின் கொலை செய்த  வழக்கில் A1 குற்றவாளியான அவரை ஊத்துக்கோட்டை போலீசார் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதால். அவரை நேற்றைய தினம் புழல் மத்திய சிறையில் இருந்து காவல் விசாரணைக்கு எடுத்த ஊத்துக்கோட்டை போலீசார் ராபின் கொலை செய்ததற்கான காரணம் என்பது குறித்து அவரிடம் விசாரணையை தொடங்கினார்கள்.

அப்போது சோழவரம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சேதுபதியும், காந்திநகர் பாடியநல்லூரை சேர்ந்த முத்து சரவணனும் 2 கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்ததாகவும் அதில் செங்குன்றம் பகுதி சேர்ந்த சேதுபதி கூட்டாளியாக தான் இருந்து வருவதாகவும் இதில் இருதரப்பினருக்கு கஞ்சா விற்பனை செய்வது ஆள் வைத்து கொலை செய்வது தொழில் போட்டி காரணமாக மாறி மாறி தாக்கியும், சினிமாவில் வருவது போல் கொலையும் செய்து வந்துள்ளதாகவும் இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ந் தேதி தனது கூட்டாளியான கானா அபி  என்பவரை  வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே முத்துசரவணன் கூட்டாளிகள் வெட்டி கொலை செய்ததாகவும் உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சேதுபதி கூட்டாளிகளான முத்துசரவணன். கூட்டாளியான  காரனோடை பகுதியைச் சேர்ந்த மோகனை  தனது நண்பன் கானா அபியை 16 ஆம்  நாள் நினைவேந்தல் முடிவதற்குள் கொலை செய்ய  திட்டம் தீட்டியதாகவும்.  ஊத்துக்கோட்டை அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட்  31 ந் தேதி மோகன் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது தங்களுக்கு தெரிய வந்ததாகவும் அப்போது அவரை கொலை செய்ய தன்னுடைய நண்பர்களான dio கார்த்திக் மதுரை சரவணன் ராகுல் இரண்டு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றதாகவும்.

அப்போது மோகன் அவனுடைய கூட்டாளிகளான ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ராபின் மற்றும் 6 பேருடன் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்   வீடு நோக்கி சென்றதாகவும். அப்போது திருமண மண்டபத்தில் வெளியே வேவு பார்த்த சேதுபதி கூட்டாளியின் ஒருவர்  திருமண மண்டபத்தில் இருந்து மோகன் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வருவதாகவும் தன்னிடம் கூறியதாகவும்.

இதனால் எதிரி முத்து சரவணன் கூட்டாளியான மோகனை தீர்த்துக்கட்ட  வெட்ட கஞ்சா போதையில் தயாராக இருந்ததாகவும் அப்போது முத்து சரவணன் கூட்டாளியான மோகனின் நண்பரான ராபின் கமல்  முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும்  அவர்கள் பின்னே மோகன் உட்பட நான்கு பேர் தாமதமாக வந்ததாகவும். மோகனும்  ராபினும் அன்று ஒரே கலர் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்ததால் பின் தொடர்ந்து  சென்ற தாங்கள் மோகன் தான் என நினைத்து ராபினை இரவில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும்.

பிறகு கிட்டை நெருங்கி சென்றபோது அது மோகன் அல்ல ராபின் என உணர்ந்து  மோகனுக்கு அடைக்கலம் கொடுத்து வைப்பது நீதானே எனக்கூறி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே ராபின் பின்னந்தலையில் முதல் வெட்டு வெட்டியதாகவும் அதன் பின் அவர் கீழே சரிந்து விழுந்ததாகவும். பின்னர் இருசக்கர வாகனத்தில் இறங்கி தானும் டியோ கார்த்திக் மதுரை சரவணன் மூவரும் ராபினை சரமாரியாக  வெட்டி தப்பியதாகவும் தெரிந்துள்ளது.

அதைத்தொடர்ந்து  போலீசாரிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக ஆந்திரா பள்ளிப்பட்டு காஞ்சிபுரம் போன்ற இடங்களில் பதுங்கி இருந்ததாகவும். அடிக்கடி தன்னுடைய சேதுபதி அணிக்கும் முத்துசரவணன் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு   அதில் முத்து சரவணன் கூட்டாளிகள் ஆறு பேரை கொன்று இருப்பதாகவும். அதேபோன்று  சேதுபதி கூட்டாளிகளான தங்கள் கூட்டத்திலிருந்து ஐந்து பேரை அவர்கள் வெட்டி கொன்று இருப்பதாகவும் பழிக்கு பழியாக தொடர்ந்து கொலை செய்து வருவதாகவும்.

கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று தனது கூட்டாளி நண்பர்கள் இருவர் விருகம்பாக்கம் அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதி சேர்ந்த ரவுடி தீனதயாளன் தனது நண்பர்களை தாக்கியதாக கூறியதால். தீனதயாளனை தீர்த்துக்கட்ட தனது கூட்டாளிகளுடன் தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு கத்தி ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு சென்றதாகவும்.

அப்போது விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே உள்ள ஏரிக்கரை அருகே நின்று கொண்டிருந்த தீனதயாளன் மீது நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசியபோது அந்த வெடிகுண்டில் இருந்து அவர் தப்பியதாகவும். பின்னர் மற்றொரு குண்டு   அடுத்தடுத்து  வீசும் போது அப்பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்து வெளியே வந்ததால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் மக்கள் கூடியதால் அவரை கொலை செய்ய திட்டம் பாதியில் நின்றதாகவும்.

அதன் பின் அந்த வழக்கில் போலீசார் தன்னை தேடப்பட்டு வருவதை உணர்ந்த தான் மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்கில் தொடர்பு இருப்பதால் தன்னை கொலை செய்ய எதிரிகள் காத்துக் கொண்டிருப்பதால் தன்னால் ஓடி ஒளிந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு கையில் பணம் இல்லாததால் வெளியே இருந்தால் எதிரி அணிகள் தன்னை கொலை செய்திடுவார்கள் என எண்ணி தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஒன்றாம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என யூடியூபில் பக்கம் சென்று பார்த்து தானே தயார் செய்து கற்றுக்கொண்டதாகவும் அந்த நாட்டு வெடிகுண்டு தான் விருகம்பாக்கம் தீனதயாளன் மீது வீசியதாகவும்   அவர் அதிலிருந்து தப்பியதாகவும் சம்பவங்கள் செய்து விட்டு குதிரை வேகத்தில் ஓடி வெவ்வேறு இடங்கள் போலீசுக்கு தெரியாமல் மறைந்து விடுவதாலும் தன் முகம் குதிரை முகம் போல் ஜாடை இருப்பதால் தான் அணியை சேர்ந்தவர்களும் எதிர் அணியை சேர்ந்தவர்களும் தனக்கு குதிரை சுரேஷ் என பட்டப்பெயர்  வைத்ததாகவும் அதனால் தன்னை அனைவரும் குதிரை சுரேஷ் என பெயர் சொல்லி தன்னை அழைத்து வந்தார்கள்.

நான் திருந்த நினைத்தாலும் தான் கொலை செய்ததற்கு பழிக்குபழியாக  என்னை கொலை செய்து விடுவார்கள் அதனால் நான் ரவுடி என்ற போர்வையில் வாழ்ந்து சாவதே மேல் என போலீஸ் விசாரணையில் குதிரை சுரேஷ் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

MUST READ