spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை...!

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை…!

-

- Advertisement -

வேடசந்தூர் அருகே திமுக கட்சியின் ஒன்றிய பொருளாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை...!திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் தி.மு.க வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

we-r-hiring

இந்த நிலையில் நேற்று இரவு மாசி பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாசி இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று தலை கழுத்து கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் மாசியின் ஒரு கை துண்டாகி தனியே விழுந்தது. இதில் மாசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு மாசியின் உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸாருக்கும் மாசியின் உறவினர்களுக்கும் இடையே கடுமையான தள்ளும் உள்ளே ஏற்பட்டது.

திமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ