அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிறந்த பச்சிளம் குழந்தை கொலை.குழந்தை கை கால் தலை என தனித்தனியாக கிடப்பதால் போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொட்டி அருகில் பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
சன் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு வாசிகள் துர்நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த பொழுது பிறந்து இரண்டு நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
இதனை அடுத்து சம்பவ இடத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய போலீசார் இறந்த குழந்தை யாருடைய குழந்தை என குடியிருப்பு வாசிகள் இடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.