spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை

-

- Advertisement -

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ்(29), இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்து கொண்டு மேலும் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ்(25), சுனில்(22), ஆகிய இருவரும் அதிசிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினார்கள். அப்போது தடுக்க வந்த அதீசின் அண்ணன்கள் ஆன முரளி(33), சுகுமார்(38), உள்ளிட்ட மூன்று பேருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.

we-r-hiring

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்காக கொண்டு சென்றனர். அங்கு கொண்டு செல்லும் வழியில் அதிஷ் பரிதாபமாக இறந்து போனார். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இறந்து போன அதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான அதீசின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அதீசின் அண்ணன் மகன்கள் சேர்ந்து அதீசை கொலை செய்து தெரியவந்தது இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ