spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் திருமணம் ஆன 5 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , தூக்கிட்டு தற்கொலைஆவடி அடுத்து அயப்பாக்கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் சூர்யா (25). இவரது மனைவி நந்தினி (25). இருவருக்கும் 5 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் ஆன நிலையில் சூர்யா ஆன்லைன் பங்குச் சந்தையில் பிசினஸ் செய்து வருகிறார்.

we-r-hiring

கடந்த சில மாதங்களாக ஷேர் மார்க்கெட் பிசினஸ்சில் பல லட்சங்களை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன், மனைவியின், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார்.

ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , தூக்கிட்டு தற்கொலை

தொடர்ந்து அதிலும் இழப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சூர்யா, நேற்று மாலை தூக்கிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருமுல்லைவாயில் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ