Homeசெய்திகள்க்ரைம்தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் - கைது.

தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் – கைது.

-

- Advertisement -

ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது.

தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் - கைது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் கலீல் ரஹ்மான். இவர் சூப்பர் நேஷன் கட்சி நிறுவன தலைவரும் ஆவார்.(கடந்த 2016 ஆம் ஆண்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஷு சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர்).இவர் பெரியவரிகம் பகுதியில் நிப்ராஸ் என்ற பெயரில் காலனி தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில் இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு, ரஹ்மானியா தெரு பகுதியை சேர்ந்த தப்ரேஸ் அஹமத் என்பவர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கலீல் ரஹ்மான் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் - கைது.

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சுரேஷ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த தப்ரேஸ் அஹமத் என்பவரை கைது செய்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் - கைது.

இவர் மீது ஏற்கனவே சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரூபாய் 1 கோடி மோசடி வழக்கும், கோவை- குனியமுத்தூர் காவல் நிலைத்தில் ரூபாய் 52 லட்சம் மோசடி புகார் என 2 புகார்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வர்த்தகம் பண மோசடி – தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது

MUST READ