Homeசெய்திகள்க்ரைம்பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 நபரை கைது செய்த போலீசார்

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 நபரை கைது செய்த போலீசார்

-

- Advertisement -

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 நபரை கைது செய்த போலீசார்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த இரு நாட்களுக்கு முன் பட்டா கத்தியுடன் வந்த 2 இளைஞர்கள் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 நபரை கைது செய்த போலீசார்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்

இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மறைமலைநகர் டாஸ்மாக் கடை பக்கத்தில் சந்தேகப்படும்படி மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 நபரை கைது செய்த போலீசார்
மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

பின்னர் போலீசார் அந்த 2 வாலிபரையும் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது பொத்தேரி பகுதியில் பட்டாக் கத்தியுடன் சென்று மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19), ஆவடியை சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகிய இருநபரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்டா கத்திகளுடன் சென்று மோட்டார் சைக்கிள் திருடிய 2 நபரை கைது செய்த போலீசார்
மறைமலைநகர் காவல் நிலையம்

 

 

 

MUST READ