spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மது பாட்டிலால் குத்தி கொலை - போலீசார் விசாரணை

மது பாட்டிலால் குத்தி கொலை – போலீசார் விசாரணை

-

- Advertisement -

அம்பத்தூர் இரயில் நிலையம் அருகே மது பாட்டிலில் குத்தி ஒருவர் கொலை – அப்பகுதியில் பரபரப்பு

மது பாட்டிலால் குத்தி கொலை - போலீஸார் விசாரணை

அம்பத்தூர் சம்தாரியா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் /43 .இவர் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டில் இருந்து நேற்று இரவு 10:45 மணிக்கு அரை சவரன் நகை எடுத்துக்கொண்டு குடிப்பதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வெளியில் சென்று உள்ளார்.இந்நிலையில் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மரம்மான முறையில் கழுத்தில் மதுபட்டிலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து உள்ளார்.

we-r-hiring

மது பாட்டிலால் குத்தி கொலை - போலீஸார் விசாரணை

இந்த தகவல் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தெரியவே உடனே
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விஜயகுமார் கழுத்தில் குவாட்டர் பாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விஜயகுமார் உடலை கைப்பற்றிய போலீசார் கீழ்பாக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் அம்பத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ