Homeசெய்திகள்க்ரைம்பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்

பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்

-

 

பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர் அவர்களை விரட்டி சென்று போலீசார் மடக்கி பிடித்தனர் அவர்கள்  அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த தங்கராஜ், ஸ்ரீநாத் மற்றும் தீபன் என்பதும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் 3பேரும் சேர்ந்து மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளின் வெளியே  நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிளை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

அவ்வாறு நோட்டமிட்டு கள்ளச்சாவி போட்டு நூதனமான முறையில் திருடி தொடர்ந்து கைவரிசை காட்டி வருவது தெரியவந்தது இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 12மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

MUST READ