spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை

கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை

-

- Advertisement -

கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை

காங்கேயம் அருகே கள்ளக்காதல் பிரச்சனையால் பெண் தீவைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

பேஸ்புக் மூலம் கள்ளக்காதல்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பிரேமா (30). இவரது கணவர் பெயர் செந்தில். செந்தில் கட்டிட மேஸ்திரி ஆக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரேமா நத்தக்கடையூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (26) என்ற இளைஞர்களுடன் பேஸ்புக் மூலமாக பழகி கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். விஜய் அடிக்கடி பிரேமாவின் வீட்டிற்கு வந்து செல்வதாகவும் தெரிய வருகின்றது. இந்த நிலையில் விஜய்க்கு நாளை திருமணம் நடக்க உள்ளது. இதை அறிந்த பிரேமா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து இவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அதே ஃபேஸ்புக்கில் பிரேமா பதிவிட்டதாகவும் தெரிகிறது.

கொலையில் முடிந்த வாக்குவாதம்

இதை பார்த்த விஜய் பிரேமாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திடீரென பிரேமா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது பிரேமா தீக்காயத்துடன் அலறியதாகவும் விஜய்க்கு சிறிய அளவு காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக 108 மூலமாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சைக்கு திருப்பூர் மருத்துவமனைக்கு பிரேமாவை பரிந்துரைத்தனர்.

இது குறித்து காங்கேயம் காவல்துறை விஜயிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்த மண்ணெண்ய் கேனை எடுத்து பிரேமா மீது ஊற்றி விஜய் தீ பற்றி வைத்ததாகவும் கூறப்படுகிறது. திருப்பூரில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா இன்று காலை உயிரிழந்தார். விஜய்யிடம் காங்கேயம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

MUST READ