சென்னையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடும் இளைஞா்களை கைது செய்ய போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனா்.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். அதே போல team-02 என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராமில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதன் வீடியோவை பதிவிட்டதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 10 இளைஞரை அண்ணா நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் அதே பெயரில் உள்ள ஐடியில் பைக் சாகசங்களில் ஈடுபடக்கூடிய வீடியோ காட்சிகள் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் இளைஞர்கள் சென்னையில் உள்ள சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்கியும், சாகசங்களில் ஈடுபடுவது போல அமைந்துள்ளது.
தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் இதே போன்று சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம்