Homeசெய்திகள்மாவட்டம்ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

-

- Advertisement -

ஆண்டிபட்டி எலக்ட்ரீசியன் விவசாய தோட்டத்தின் அருகே நின்றிருந்த போது இடி தாக்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது

ஆண்டிபட்டி சிவக்குமார் ஆண்டிப்பட்டி அருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு .

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது கனமழையின் போது பிராதிக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான எலக்ட்ரீசியன் ராஜா அதே கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் அருகே மரத்தடியில் நின்றிருந்தார் திடீரென இவர் மீது இடி தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கானாவிலக்கு காவல்துறையினர் இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.ஆண்டிபட்டி சிவக்குமார் ஆண்டிப்பட்டி அருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு .

மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இறந்த எலக்ட்ரீசியன் ராஜாவிற்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் இடி தாக்கி எலெக்ட்ரிசியன் உயிரிழந்ததால் பிராதிக்காரன்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது

ரூ.1.21 கோடி பண மோசடி வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது!

MUST READ