Homeசெய்திகள்மாவட்டம்பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலியா? கொலையா? – பரபரப்பை ஏற்படுத்திய விசித்திர சம்பவம்!

பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலியா? கொலையா? – பரபரப்பை ஏற்படுத்திய விசித்திர சம்பவம்!

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுடுகாட்டில் விசித்திரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த குழியைத் தோண்டிய போது, ஊர்மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி விலகிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பல்லடம்

we-r-hiring

சுடுகாட்டில் வீசிய சந்தேகம்!

பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் அருகே ஆறாக்குளம் பிரிவில் உள்ள சுடுகாட்டுப் பாதையில் பொதுமக்கள் சிலர் வழக்கம்போலச் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதிதாகக் குழி தோண்டப்பட்டு, அது கற்களால் மூடப்பட்டிருந்தது.

மேலும், அந்த குழியின் மீது பூக்கள் தூவப்பட்டு, அருகில் துணி ஒன்றும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சிறிய கிராமம் என்பதால் கடந்த இரு நாட்களாக ஊரில் யாரும் இறக்காத நிலையில், “வெளி ஆட்களை யாரையாவது கொலை செய்து அவசர அவசரமாகக் கொண்டு வந்து புதைத்திருப்பார்களோ?” அல்லது “நரபலி ஏதேனும் கொடுக்கப்பட்டிருக்குமோ?” என கிராம மக்களிடையே அச்சமும் சந்தேகமும் வேகமாகப் பரவியது.

துர்நாற்றத்தால் அதிகரித்த பீதி!

கிராம மக்கள் உடனடியாக அளித்த தகவலின் பேரில், பல்லடம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஊராட்சிப் பணியாளர்களின் உதவியுடன் சந்தேகத்திற்குரிய அந்த இடத்தை போலீசார் தோண்டத் தொடங்கினர். அப்போது, குழியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், மனித சடலம்தான் புதைக்கப்பட்டுள்ளதோ என்ற பீதியில் பொதுமக்கள் மூக்கில் விரலை வைத்தபடி அச்சத்துடன் காத்து நின்றனர்.

குழியில் இருந்தது என்ன? – போலீசாருக்கு அதிர்ச்சி!

குழியை முழுமையாகத் தோண்டிப் பார்த்தபோது, அங்கு மனித சடலத்திற்குப் பதிலாகப் புதைக்கப்பட்ட நிலையில் நாய் ஒன்றின் உடலே கிடந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிகாரிகளும் போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அசம்பாவிதம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், மீண்டும் அந்த குழியை மூடுமாறு அறிவுறுத்தினர்.

போலீசார் விசாரணை

இறந்துபோன செல்லப் பிராணியான நாயின் உடலை, அதன் உரிமையாளர் துணியில் சுற்றி எடுத்துவந்து, சுடுகாட்டில் முறைப்படி புதைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்திச் சென்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொலை அல்லது நரபலியாக இருக்குமோ என்ற அச்சத்தில் கிராம மக்களைப் பீதியில் ஆழ்த்தியதோடு, வருவாய்த்துறையினரையும் காவல்துறையினரையும் சில மணி நேரம் அலையவிட்ட இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுடுகாட்டில் நாயைப் புதைத்துவிட்டுச் சென்ற உரிமையாளர் யார் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ