spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

-

- Advertisement -

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்க அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லாரம்பள்ளி, மோரமடுகு கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.

we-r-hiring

ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கின்ற பொருட்கள் மூலம் இயற்கை விவசாயம் செய்வது குறித்து பயிற்சி அளிப்பதோடு பல்வேறு தொழில்நுட்பங்களையும் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

MUST READ