Homeசெய்திகள்இந்தியாநாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?

-

- Advertisement -

இந்தியாவில் மிகப்பெரிய விமான விபத்து ஏற்படப்போகிறது என்றும் அதற்கு கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக இருக்கப்போகிறது என்றும் ஜோதிடர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள். பிரபல ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் விமான விபத்து பற்றி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒரே ஒருவரைத்தவிர 241 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களும், பொதுமக்கள் சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து பெண் ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் “கடந்த டிசம்பர் மாதம், எக்ஸ் பக்கத்தில், “2025ம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாக செயல்படும். மேலும் விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும்
இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

நம்முடைய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது. குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரையில் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

மீண்டும் கணித்து சொன்ன பெண் இந்த ட்வீட்டை, மீண்டும் மேற்கோள் காட்டி, கடந்த ஜூன் 5ம் தேதி மற்றொரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.. அதில், ”டாடா நிறுவனம், ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடல் பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே பிரம்மிக்க வைக்கும். இது கடந்த வருடம் நட்சத்திரங்களின் நகர்தல் மூலம் கணிக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கொண்டுள்ளேன்” என்று ஜோதிடர் ஷர்மிஸ்தா பதிவிட்டிருக்கிறார்.

air india accident

இதே போல கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திலுள்ள டவுன் நயாநகரில், சுக்தேவானந்தா சுவாமி மடத்தின் மடாதிபதி அபிநவ சித்தலிங்க சுவாமிஜி விமான விபத்து குறித்து கடந்த ஏப்ரல் மாதமே அருள்வாக்கு கூறியுள்ளார். அருள்வாக்கு சொன்ன சாமியார் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி இந்த மடத்தின் திருவிழா நடைபெற்றது.

அப்போது, அபிநவ சித்தலிங்க சுவாமிஜி, எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியிருந்தார்… அதில், இனிவரும் நாட்களில் பலத்த தீவிபத்து ஏற்படும். முக்கியமாக விமான விபத்து ஏற்படும், அந்த விபத்தில் பயங்கரமான தீப்பிடிக்கும். ஒரு நகரமே நாசமாகும் என்றெல்லாம் கூறியிருந்தார். கர்நாடக சாமியாரும், பெண் ஜோதிடரும், விமான விபத்தை முன்கூட்டியே கணித்து கூறியிருந்த செய்திகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

கிரகங்களின் சேர்க்கை, பார்வை ஆகியவற்றை பொருத்து ஜோதிடர்கள் கணிப்புகளை வெளியிடுகின்றனர். ராகு கிரகம் நோய்கள் மூலம் உயிர்பலி வாங்கும் எனில் சனி பகவானின் நகர்வு செவ்வாய் பகவானின் பார்வை விபத்து உயிர்பலி ஆகியவற்றை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

 

MUST READ