spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமருமகனுக்கு 100 வகையான உணவுகளை பறிமாறி அசத்திய மாமியார்

மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பறிமாறி அசத்திய மாமியார்

-

- Advertisement -

ஆந்திராவில் ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு, அவரது மாமியார் 100 விதமான உணவுகளை சமைத்து பரிமாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த ரவி தேஜாவுக்கு, கடந்த ஒராண்டுக்கு முன்பு கிர்லாம்பூடி மண்டலம் தாமரடா கிராமத்தை ச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

we-r-hiring

இந்நிலையில், தெலுங்கு நாட்காட்டியின்படி ஆஷாதா மாதம் நிறைவடைந்து முதன்முறையாக புது மண தம்பதியினர், மாமியார் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது,ரத்னகுமாரியின் தாயர், புது மருமகனுக்கு 100 வகையான பச்சரிசி உணவுகளை சமைத்து பரிமாறினார். இதனால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான ரவி தேஜா உணவுகளை சுவைத்து மகிழ்ந்தார்.

இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளை ஒரே சமயத்தில் கண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், தனது மாமியாரின் இந்த செயல் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் ரவி தேஜா தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்வம் குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ