Homeசெய்திகள்இந்தியாமக்களவை தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

-

'மக்களவைத் தேர்தல் 2024'- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்ட வாக்குப்பதிவு?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதேபோல் மூன்றாம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 07ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாகவும், ஒடிசா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 4 தொகுதிகளுக்கும், பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

MUST READ