அதானி – ஹிண்டென்பர்க் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி பங்குச்சந்தைகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், பொய்யானத் தகவல்களை பரப்பி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஜனவரி இருபத்தி நான்காம் தேதி ஆய்வறிக்கையை வெளியிட்டது.

இந்த ஆய்வறிக்கை இந்திய பங்குச் சந்தைகளில் மட்டுமில்லாமல் இந்திய அரசியலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் வர்த்தகமாகி ஏராளமானோருக்கு நட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டு உலக பணக்காரர்கள் வரிசையில் முப்பத்தெட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் பதினேழாம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஹின்டன்பர்க் அறிக்கை“ தொடர்பாக விசாரணைக்கான செபியின் பரிந்துரையை சீலிட்ட கவரில் நீதிபதிகளிடம் வழங்கியதோடு அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கு நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு அமைக்கலாம்.

யார் அந்த நீதிபதி என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என தெரிவித்தார். சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்த மத்திய அரசின் யோசனையை முழுமையாக நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமல்ல எந்த தரப்பிடம் இருந்தும் நாங்கள் பரிந்துரையும் பெறப்போவதில்லை.
உச்ச நீதிமன்றம் தான் குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்தையும் இறுதி செய்யும். அதானி நிறுவனம் முறைக் கேட்டு விவகாரத்தில் கண்டிப்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் இந்த விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள தற்போது பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க இயலாது என்பதால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்.
மேலும் உச்ச நீதிமன்றம் அமைக்கும், நிபுணர்கள் குழுவுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து ஒத்திவைத்திருந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில் இந்த விவகாரம் என்பது மூலதனம் தொடர்பானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று இது போன்ற சர்ச்சை விவகாரங்கள் வருவதன் மூலம் செபி அமைப்பு சரியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது தெரியவருகிறது. அதனை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் அதானி – ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். இதுத் தொடர்பான ஒரு கட்டமைப்பை செபி அமைப்பு உடனடியாக உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் குறிபிட்டுள்ளனர். இந்த விவகாரம் என்பது செபி விதிகளின் எஸ் பத்தொன்பது என்பது மீறப்பட்டுள்ளதா பங்கு விலையில் ஏதேனும் கையாடல் செய்யப்பட்டுள்ளதா என்பதை செபி அமைப்பு விசாரிக்க வேண்டும்.
விரிவான விசாரணையை தினமும் நடத்தி 2மாதத்தில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் செபி அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் சிறப்பு நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படுகிறது.
அதில் ஓபி.பட், நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நிலக்கனி, கே.வி.காமத், சோமசேகரன் சுந்தரேசன் ஆகிய ஐந்து பேர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கினர். இதன் அடிப்படையில் இந்த குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதே நேரத்தில் செபி அமைப்பு விவகாரத்தில் மேலும் 6மாத காலம் கூடுதல் அவகாசம் கேட்கிறது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.