Homeசெய்திகள்இந்தியாடிராபிக் ஜாமில் செம ஐடியா.. வாடகை கார் கூரை மீது ஏறி அமர்ந்து வேலை பார்த்த...

டிராபிக் ஜாமில் செம ஐடியா.. வாடகை கார் கூரை மீது ஏறி அமர்ந்து வேலை பார்த்த ஊழியர் – இணையத்தில் பரபரப்பு!

-

- Advertisement -

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, நபர் ஒருவர் தான் பயணித்த வாடகை காரின் கூரை மீது அமர்ந்து லேப்டாப்பில் தீவிரமாக வேலை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.டிராபிக் ஜாமில் செம ஐடியா.. வாடகை கார் கூரை மீது ஏறி அமர்ந்து வேலை பார்த்த ஊழியர் - இணையத்தில் பரபரப்பு!

ஹரியானாவின் தொழில்நுட்ப நகரமான குருகிராமில் அண்மையில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பிரதான சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

we-r-hiring

WFH சொல்லிவிட்டு காரில் வேலை!
இந்தச் சூழலில், பணிக்குச் சென்ற நபர் ஒருவர் தான் பயணித்த வாடகை கார் (Cab) மணி கணக்கில் நெரிசலில் சிக்கியதால், செய்வதறியாது தவித்துள்ளார். அலுவலகத்தில் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home – WFH) செய்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்ட அந்த ஊழியர், காரின் உள்ளே அமர்ந்து வேலை செய்ய இயலாததால், துணிச்சலாகக் காரின் கூரை (Roof) மீது ஏறி அமர்ந்துள்ளார். அங்குச் சுற்றியுள்ள வாகன நெரிசலையோ, மழையின் தாக்கத்தையோ பொருட்படுத்தாமல், கூரை மீதே தனது லேப்டாப்பை வைத்து அவர் தீவிரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இணையத்தில் வைரல்
அருகில் இருந்த வாகன ஓட்டிகள் சிலர் இந்த அபூர்வக் காட்சியைக் கைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். “ஐடி நிறுவனங்களின் வேலைப்பளு எந்த அளவுக்கு மக்களை மாற்றுகிறது என்பதற்கு இதுவே சான்று” எனப் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெள்ளத்திலும் போக்குவரத்து நெரிசலிலும் சிக்கினாலும், தனது வேலையை விடாமல் காரின் கூரை மீது அமர்ந்து பார்த்த அந்த நபரின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: 400 பேருடன் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு!

MUST READ