spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

-

- Advertisement -

 

காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!
File Photo

காவிரி ஒழுங்கற்றுக் குழு கூட்டம் நாளை (நவ.23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

we-r-hiring

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

இந்த கூட்டத்தின் போது, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதா என்பது குறித்து கணக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 03- ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் நவம்பர் 23- ஆம் தேதி வரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- அதிக பார்வையாளர்கள் நேரில் பார்த்த தொடர்!

எனினும், கர்நாடகா அரசு தண்ணீர் திறக்காத நிலையில், தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ