
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (செப்.13) மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர்கள் ஹெச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு
அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது, மேகதாது அணை, கர்நாடகா அணைகளின் நீர்இருப்பு உள்ளிட்டவைக் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்திற்கு தரக்கூடாது என்று முடிவெடிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முதலமைச்சருமான சித்தராமையா,”கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது. 53 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழல் இல்லை.
மழைப்பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம். கர்நாடகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவே 70 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிடம் மனுத்தாக்கல் செய்வோம். அதேபோல், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் முறையீடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்
அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி என்ற வீதத்தில் தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க, காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா அரசுக்கு பரிந்துரைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.