Homeசெய்திகள்ஆவடிவிவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

-

- Advertisement -

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் விவசயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் அதன் அடிப்படையில் சட்டமன்ற அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது .கூட்டத்தில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் பங்கேற்றார்.

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு அதில் அவர், ஆவடியில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வசதிகள் மற்றும் நுகர்வோர்கள் பெரும் வசதிகள் குறித்து விளக்கினார். விவசாயிகள் குறைகளையும் கேட்டறிந்து அவற்றை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் ஆவடி மாநகர மேயர் ஜி. உதயகுமார் ,வேளாண்மை விற்பனை இணை இயக்குனர் விஜயகுமாரி, ஆவடி மண்டல  சேர்மேன் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத் ,ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ