Homeசெய்திகள்இந்தியா"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை"- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை”- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை"- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
Photo: Congress

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்!

டெல்லியில் அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (அக்.09) காலை 10.00 மணிக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி எம்.பி., ராகுல் காந்தி எம்.பி. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி எம்.பி., “காங்கிரஸ் கட்சி ஆளும் நான்கு மாநிலங்களில் மூன்று மாநில முதலமைச்சர்கள் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பா.ஜ.க. ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர். ஓ.பி.சி. பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து. அவர்களை பிளவுப்படுத்தவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ