Homeசெய்திகள்இந்தியாதேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!

-

- Advertisement -

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

அரசியல் கட்சிகள் அதிகளவில் நிதிகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (பிப்.15) தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘டியர்’….. விரைவில் வெளியாகும் முதல் பாடல்….. அட்டகாசமான ப்ரோமோ வெளியீடு!

கடந்த 2017- ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறலாம். இந்த சட்டத்தில் உள்ள பல சரத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் இரண்டு பொதுநல அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் அனுக் சவுத்ரி என்பவர் முறையிட்டார்.

லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!

வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு விசாரணையை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய், மனோஜ் மிஸ்ரா, பர்திவாளா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை மூன்று நாட்கள் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று (பிப்.15) தீர்ப்பை வழங்குகிறது.

MUST READ