Homeசெய்திகள்இந்தியாதேர்தல் பத்திர முறை ரத்து.....தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

-

- Advertisement -

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.

ஜோஸ்வா இமை போல் காக்க படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய 15 அம்சங்களைப் பார்க்கலாம். அதன்படி, தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19 (1)(A) மீறும் வகையில் உள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் ரத்துச் செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திரத் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்துச் செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திர சட்டங்கள் மட்டுமின்றி தேர்தல் பத்திரங்களை வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் செய்யப்பட்ட கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்துச் செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்.

2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் தற்போது வரையில் வாங்கப்பட்ட தேர்தல் நிதி பத்திரங்கள் பெற்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி மார்ச் 06- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எந்தெந்த கட்சிகள் தேர்தல் நிதி பெற்றனர் என்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

பர்த் மார்க் படத்தின் முன்னோட்டம் வெளியானது

எஸ்பிஐ வங்கியிடம் தகவலைப் பெற்ற ஒருவாரத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும். 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் அரசியல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு அரசியல் கட்சிகளால் பணமாக மாற்றப்படாத பத்திரங்கள் மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, பத்திரங்களை வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

அரசியலில் கருப்பு பணத்தைத் தடுப்பது தேர்தல் பத்திரத் திட்டம் என்பதை நியாயப்படுத்த முடியாது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன. வெளிப்படைத் தன்மை உள்ளது என்ற மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எந்த ஒரு அரசையும் கணக்கு கேட்கும் அதிகாரம் தகவல் உரிமைச் சட்டத்திற்கு உள்ளது.

MUST READ