
பயிர்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
பட்டையை கிளப்பிய பதான்… இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் தொடக்கம்….
இந்த சூழலில், உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் குவிந்து வரும் நிலையில், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து, டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப்- ஹரியானா மாநில எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்றிருந்த இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். அவருக்கு வயது 21. இதையடுத்து, விவசாயிகளின் போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தனர்.
ஓடிடி தளத்தில் வெளியான 3 ஹிட் படங்கள்
இந்த சூழலில், போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணமும், அந்த விவசாயின் தங்கைக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.