
ஹனுமான்கர் நகர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம்,குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்து
ராஜஸ்தான் மாநிலம், சூரத்கர் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 ஜெட் வகை போர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். பலோல் நகர் பகுதியில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, விமானம் குடியிருப்பில் விழுந்தது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் நபர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
பாராசூட் மூலம் குதித்த விமானி சிறிய காயங்களுடன் விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார். இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் சம்பவ இடத்திற்கு சென்ற விமானப் படையின் உயரதிகாரிகள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சியின் போது விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.