spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகரும்புக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு!

கரும்புக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு!

-

- Advertisement -

 

கரும்புக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு!

we-r-hiring

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8% அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஒரு குவிண்டால் கரும்புக்கு கொள்முதல் விலை 340 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 315 ரூபாயாக இருந்தது. கரும்பில் இருந்து 10.5%- க்கும் அதிகமான சர்க்கரை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கரும்புக்கான அதிகபட்ச விலை இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நலன் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…

வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ