- Advertisement -
இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. ஐ.என்.எஸ் சூரத் கப்பல் மூலம் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
கொடூர தாக்குதல் மூலம் இந்தியாவை சீண்டுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதன் எதிரொலியாக எந்த நேர்த்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பாக்கப்படுகிறது.