
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹாரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், “இந்தியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது; சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அல்ல. மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தங்கள் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 65 தொகுதிகளில் போட்டியிடும். மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிருப்தி அடையாத வகையில், தொகுதிகளின் ஒதுக்கீடு இருக்கும்; அவர்களுக்கு உரிய கவுரவமும், உரிய மரியாதையும் அளிக்கப்படும்” என்றும் பேசினார்.
ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யாததால், அகிலேஷ் யாதவ் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், அகிலேஷ் யாதவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.