ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட ஆவடி செக்போஸ்ட் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலை விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்பு அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் இருசக்கரத்தில் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் கட்டாயம் இருக்கை பெல்ட் அணிய வேண்டும் என்றும் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
பின்பு இருசக்கர வாகன ஓட்டிகளை அழைத்து ஆவடி சுற்றுப்பகுதியில் போக்குவரத்து இடையூறுகள் அதிக அளவில் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது போக்குவரத்து ஆய்வாளர்கள் சீர் செய்கிறார்களா? என பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்பு, போக்குவரத்து காவல் துணைஆணையார் ஜெயலட்சுமி ஐபிஎஸ் அவர்கள் பேசியதாவது:
ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்துவதாகவும், முக்கியமாக போக்குவரத்து சிக்னல், மக்கள் அதிக கூடும் இடங்கள், போக்குவரத்து அதிகம் கூடும் இடங்களில் மக்கள் விபத்து இல்லாமல் எப்படி செல்வது, உடமைகளையும் உயிர்களையும் எப்படி காத்துக் கொள்வது, இதுபோல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருப்பதாகவும், அதனை பின்பற்றினால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்அவர்களாகவே போக்குவரத்தை கட்டாயமாக குறைக்க முடியும்.
அதேபோல் சாலை விதிகளை மதிக்கிறோம் விபத்துகளை எங்களால் தவிர்க்க முடியும் என்றும் அவர்களாகவே முன்வந்து கையெழுத்தும் போட்டுச் உறுதிமொழி எடுத்துச் செல்வதால் எங்களால் விபத்துகளை முற்றிலும் குறைக்க முடியும்.
தற்பொழுது சாலை பணிகள் அதிகம் நடப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கிறது. இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க இதுபோல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பகுதிகளும் நடத்தப்படும் என்றும், அதேபோல் ஆவடி செங்குன்றம் பகுதிகளிலும் மட்டுமல்லாமல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.