spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசூடுபிடிக்கும் வாரணாசி தொகுதி... பிரதமர் மோடிக்கு பின்னடைவு..

சூடுபிடிக்கும் வாரணாசி தொகுதி… பிரதமர் மோடிக்கு பின்னடைவு..

-

- Advertisement -
பிரதமர் மோடி
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து அரியணை ஏறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தன. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில் வாரணாசி தொகுதியில் முன்னிலையில் இருந்த பிரதமர் மோடி தற்போது பின்னடைவைச் சந்தித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

MUST READ