- Advertisement -
மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் ஓராண்டாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தாா். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு மணிப்பூரின் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் விரையில் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வன்முறை அச்சம்… பயத்தில் கட்சிகள்- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி..!



