
மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் (ஜூன் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அழைப்பு விடுத்துள்ளார்.
மூடப்படும் 500 மதுக்கடைகள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!
வரும் ஜூன் 24- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 03.30 மணிக்கு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழல், கலவரத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!
இதனிடையே, மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.